கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் கௌதம் (வயது 19), மணி மகன் தீபக் ( வயது 19) இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுடைய தாத்தா இறந்து விட்டதால் அவருடைய பிறப்பின் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள். ஊரிலேயே தங்கி இருந்தனர். இன்று அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்ற போது கௌதம் தண்ணீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்றச் சென்ற தீபக் தண்ணீரில் மூழ்கி இருவரும் தத்தளித்து உள்ளனர் .இதைக் கேள்விப்பட்ட ஊர் பொதுமக்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை என்பதால் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு இருவரையும் சடலமாக மீட்டனர். ஒரே வகையரா குடும்பத்தில் இரண்டு வாலிபர்களை இறந்ததால் ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை