Header Ads

  • சற்று முன்

    தம்பி மனைவியை கட்டையால் அடித்து கொலை அண்ணன் தலைமறைவு !

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 44). கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக உள்ளார். இவருக்கும் செங்கொடி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் செங்கொடிக்கு ஏற்கனவே மகாலிங்கம் என்பவருடன் முதல் திருமணம் நடந்து அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அதன்பின்பு தான் சின்னதுரையுடன் திருமணம் நடந்து உள்ளது.

    இந்தநிலையில் செங்கொடி கடந்த 8 மாதத்திற்கு முன்பு கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கோவிந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சின்னதுரையின் வீட்டிற்கு அவரது அக்காள் ஈஸ்வரி வந்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு திடீரென போலீஸ் ஏட்டு சின்னதுரையின் வீட்டுக்கு அவரது மனைவி செங்கொடி வந்தார். அங்கு அவர் வீட்டில் இருந்த ஈஸ்வரியிடம், எனது வீடு, நீ வீட்டை விட்டு போ என்று கூறி வீட்டுக்கு உரிமை கொண்டாடி தகராறு செய்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் ஈரோட்டில் வசித்து வரும் சின்னதுரையின் அண்ணன் ரத்தினம், தனது தம்பி மகன்களை பார்க்க அங்கு வந்து உள்ளார். வந்த இடத்தில் செங்கொடி தகராறு செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த ரத்தினம் செங்கொடியை கண்டித்து உள்ளார்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் ரத்தினம், தனது தம்பி மனைவி செங்கொடியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபரீத சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad