ரைமிங்கா பேசுவது சினிமாவுக்கு நல்லா இருக்கும் ஆனா அரசியலுக்கு நல்லா இருக்காது என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
கமல்ஹாசன் கருத்து ரைமிங்கா பேசுவது சினிமாவுக்கு நல்லா இருக்கும் ஆனா அரசியலுக்கு நல்லா இருக்காது என்றார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீர விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணி நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பாலமுருகன், சௌந்தர்ராஜன்,பாபு, குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை உட்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில்
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என கமலஹாசன் டூவிட்டரில் பதிவு குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் :
நடிகர் கமலஹாசன் வார்த்தைக்கு பொருந்தாத கருத்துக்களை கூறி வருகிறார் யாரும் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்ததாக கூறவில்லை உலக அளவில் அச்சத்தில் இருக்கும் நிலையில் இந்திய அரசு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு மருந்து கண்டுபிடித்தால் நாங்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்து கொடுப்போம் என்று தான் கூறியுள்ளோம் இதுவரை கொரோனா காலகட்டத்தில் வெளியே வராமல் இருக்கும் கமலஹாசன் மக்களை சந்திக்காத கமலஹாசன் காணொலிக் காட்சி மூலமாக சந்தித்து வருகிறார் மருந்து இல்லை என்று எல்லாருக்குமே தெரியும் உலகத்திற்கே தெரியும் கண்டுபிடித்தால் கொடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறாரேமே தவிர இந்த நேரத்தில் வரவேற்க வேண்டுமே தவிர மக்களை குழப்ப கூடாது அவர் கருத்து ரைமிங்கா பேசுவது சினிமாவுக்கு நல்லா இருக்கும் ஆனா அரசியலுக்கு நல்லா இருக்காது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை