Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி புற்றுக்கோவிலில் - அஷ்டமி சிறப்பு பூஜை

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி  சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், யாகசாலை பூஜையில்  கணபதி, திருஷ்டி துர்கா சூலினி துர்கா ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி சுவாமிகள் செய்தார்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், சீதா, எட்டப்பன், பிரேமா, முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad