Header Ads

  • சற்று முன்

    திருநாவலூர் காவல் நிலையம் மூடல் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு கரோனா

    ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக திருநாவலூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் 20 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதில், பெண் காவல் ஆய்வாளர் மற்றும் 2 உதவி காவல் ஆய்வாளர்கள், மூன்று காவலர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பாதுகாப்புக்காக திருநாவலூர் காவல் நிலையம் சனிக்கிழமை மாலை மூடப்பட்டது.காவல் நிலையம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் வருவதற்கு மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி நடைபெற்றுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad