திருவாடானையில் மாடு குறுக்கே வந்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூத்த வழக்கறிஞர் பலியானார்
திருவாடானை கல்லூர் பகுதியில் இருந்த திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 20 வருடத்திற்கு மேலாக பணியாற்றி வந்த நாகராஜன் இவர் கடந்த 25ம் தேதி நீதிமன்ற பணி முடித்து இரண்டு சக்கர வாகனத்தில் மாலை வீட்டிற்கு மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாரதிநகர் என்ற பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் வழக்கறிஞர் நிலை தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளானதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது குறித்து திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விரித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை