அரக்கோணத்தில் திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது!!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிபில்ஸ்ட் பேட்டை, பஜனை கோயில் தெருவை சேர்ந்த அசோக் என்கிற அசோக்குமார் த/பெ புஷ்பராஜ் என்பவர் அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு கொள்ளை, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 6.08 .2020 அன்று அசோக் குமார் என்பவரை அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் நகர காவல் ஆய்வாளர்
கோகுல்ராஜ் விசாரணை மேற்கொண்டு குற்றவழக்கு பதிவு செய்து இவர் மூலம் மீண்டும் தொடர் குற்றங்கள் நடைபெறா வண்ணம் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி ஐஏஎஸ், அவர்களுக்கு குற்றவாளி அசோக் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார் இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒப்புதல் அளித்த தன்பேரில் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு வருடம் வெளியில் வராதபடிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை