Header Ads

  • சற்று முன்

    டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு

     

    திருச்சி திருவெறும்பூர் அரியமங்கலம் உய்யகொண்டான் கரையை ஒட்டி புதிதாக டாஸ்மாக் கடை10214  திறக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனு அளித்த பெண்கள் பேசுகையில்,

    திருச்சி திருவரம்பூர் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரைப்  பகுதியில் டாஸ்மாக் கடை எண்10214 கடை வருவது அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நஜிரான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு  2017ஆண்டு மனு அளித்தார்.முதல்வர் தனிப்பிரிவில் 17 - 3 - 2017 தேதி மனு எண் 33570/2017 பதிவு செய்யப்பட்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என மனு நிராகரிக்கப்பட்டது.

    19-3-20 தேதியிலும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மது கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில்17-9-20மாலை திடீரென டாஸ்மாக் கடை எண்  10214 உய்யகொண்டான் ஆற்றின் கரை அருகே திறக்கப்பட்டது. 

    இதுகுறித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad