Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவிலை தெருவைச் சேர்ந்தவர் கோடிஸ்வரன் வெட்டி படுகொலை



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவிலை தெருவைச் சேர்ந்தவர்  கோடிஸ்வரன்(30). பெயிண்ட்ராக வேலை செய்து வந்துள்ளார். இன்று மாலையில் கோடீஸ்வரன் பாரதிநகர் மேட்டுத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி கலை கதிரவன் தலைமையில் வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



    வெட்டி படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரனுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலையூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் திருமணம்  நடைபெற்று உள்ளது. இந்நிலையில் மனைவி பிரிந்து இருந்துவரும் நிலையில் கோடீஸ்வரனுக்கு  வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad