Header Ads

  • சற்று முன்

    சென்னையில் தொழிலதிபரைக் கடத்திப் பணம் பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது


    சென்னையில் தொழிலதிபரைக் கடத்திச் சென்று 2 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் பயங்கரவாதி என கூறப்படும் தவ்பீக்கின் கூட்டாளிகள் மேலும் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சென்னை மண்ணடியைச் சேர்ந்த திவான் அக்பரைக் கடத்திச் சென்ற கும்பல் 2 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்ததில் தவ்பீக்கும் அவன் கூட்டாளிகளும் கடத்தல் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தவ்பீக்கின் கூட்டாளிகள் இருவரும், தவ்பீக்கின் மனைவி சல்மாவும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தவ்பீக்கின் கூட்டாளிகளான கோவையைச் சேர்ந்த அப்துல் காதர், சிக்கந்தர் ஆகியோரை ஆனைமலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad