Header Ads

  • சற்று முன்

    கண்ணமங்கலம் அருகே பைக்-கார் மோதி விவசாயி சாவு


    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராயண மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்குழந்தை. இவருடைய மகன் செல்வம் (வயது35). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அருள் (3) என்ற ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந்தேதி செல்வம், அவரது குழந்தை, நண்பர் தேவன் (30) ஆகிய 3 பேரும் பைக்கில் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தனர். பைக்கை தேவன் ஓட்டினார்.

    அப்போது, போளூரில் இருந்து வேலூர் நோக்கி பின்புறம் வந்துக்கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில், குழந்தை உள்பட பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் 3பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக செல்வம் மட்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் நள்ளிரவு இறந்தார்.

    குழந்தை அருள், நண்பர் தேவன் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad