இலங்கை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஏற்றது
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கினார்.
கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. முதலில் 23 நிர்வாக மாவட்டங்களுக்கான இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அதன்பின்னர், இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்துகொள்ளும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டாக தமது பதவி பிரமாணத்தை செய்தனர். பதவி பிரமாணத்தின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை