மொபைல்போன் பேசியபடி சென்றவர் ரயில் இன்ஜின் மோதி பலி
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்ணுபுரத்தை சேர்ந்தவர் முருகன், 26. சென்னையில் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சென்னையிலிருந்து சொந்த கிராமத்துக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, கிராமத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில், மொபைல் போன் பேசியவாறு நடந்து சென்றார். அப்போது, வேலூரிலிருந்து, விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் இன்ஜின், அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை