Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் 74 வது சுதந்திர தின விழா


    ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் 74 வது சுதந்திர தின விழா ராணிப்பேட்டை வாரசந்தை மெயின் கேட் அருகிலுள்ள  மாவட்ட சங்க அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்றது.  விழாவிற்கு சங்க ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் த.சையத் சபி,  தலைமை தாங்கி பேசினார். ராணிப்பேட்டை சங்க  நகரச் செயலாளர் த. நித்தியானந்தம் அனைவரையும் வரவேற்று பேசினார்.  சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எம். தமிழரசன், மாவட்ட துணைத் தலைவர் ஆர். பத்மநாபன் , மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் . விழாவில் சிறப்பு விருந்தினராக சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல  சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்த. தினகரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில்  மாவட்ட பொருளாளர் கே. கருணாகரன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.  விழாவில் சங்க மாவட்ட துணை செயலாளர் புளியங்கண்ணு மகேஷ்,  சங்க மாவட்ட காப்பாளர்கள் என். பொற்கைப்பாண்டியன் எம். சுதாகர் மற்றும் பொறியாளர் த. மதிவண்ணன், ரவி ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள் விழா முடிவில் லம்பா நந்தகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார் . விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ராணிப்பேட்டை மாவட்ட சங்க நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad