கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள 126 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள 126 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரியும் கடைகளை இழக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடைகள் கட்டி கொடுக்க கோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி பிரதான சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசுப்பு விஜயலட்சுமி மணி கிருஷ்ணவேணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை