Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகே 65 மூதாட்டியை வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!



    வீட்டு விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு!

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆரிகான்நகர் பகுதியைச் சார்ந்த கோவிந்தராஜ் மகன் ராகுல் (29) அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மனைவி மீனா (65) மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மூதாட்டி மீனா தங்களது வீட்டில் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். ராகுல் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் போல் தெரிகிறது. இதனால் ராகுலை அவருடைய தந்தை கோவிந்தராஜ் அவருடைய வீட்டு கழிப்பிடத்தில் அவரை அடைத்து வைத்துள்ளார் இருந்தாலும் கழிப்பிட ஜன்னலை உடைத்துக்கொண்டு  நேற்று இரவு ஒரு மணி அளவில் ஊறுகாய் வாங்க மீனா வீட்டிற்கு ராகுல் சென்றுள்ளார்.

    மூதாட்டி மீனா இரவு ஒரு மணி ஆகிறது காலை வந்து வாங்கிக் கொள் என்று சொல்லி இருக்கிறார். இருப்பினும் அதனைக் கேட்காத ராகுல் திடீரென கதவைத் திறந்து வீட்டிற்குள் புகுந்து  உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மீது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ராகுலை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

    அதன்பின்னர் இச்சம்பவம் குறித்து மீனாவின் மகன் விநாயகன் ஜோலையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்கையில்

    ராகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இந்த ஊரில் உள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் இளம் பெண்கள் மற்றும் ஆடு மாடுகளின் கால்களை  கயிறு கட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

    அது மட்டுமின்றி ஆரிகான்நகர் பகுதி கழிப்பிட வசதி இல்லாத கிராமமாக திகழ்கிறது.

    பெண்கள் மாலைநேரத்தில் கழிப்பிடம் செல்ல முடியாத சூழ்நிலையும் அதற்கு முழுக் காரணமாக ராகுல் கழிப்பிடம் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ராகுல் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அதே பகுதியில் குடிபெயர்ந்த வடமாநிலத்தை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதன் புகாரின் பேரில் தற்போது தான் ராகுல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். வந்த சில தினங்களிலேயே திரும்பவும் இந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். இதேபோல் சுமார் இப்பகுதியில் வசிக்கும் 25 பெண்களுக்கு மேலாக இவன் தகாத முறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சில சில பெண்கள்  இவர் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

    எமது செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad