பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளை நூதன தண்டனை வழங்கிய போலீசார்.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றி திரிவது வாடிக்கையாக உள்ளது இந்த நிலையில் பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை பூந்தமல்லி போலீசார் மடக்கிப் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். சிக்கியவர்களை கொளுத்தும் வெயிலில் சாலையில் நிற்கவைத்து தோப்பு கரனம் போடுவது, மைதானத்தில் பின்னோக்கி ஓட வைப்பது, வெளியே வந்தால் தண்டனை அதிகரிக்கும் என உறுதிமொழி எடுக்க வைப்பது உள்ளிட்ட நூதன தண்டனைகளை வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.வேண்டுமானால் உதவலாம் என கூறினார;.
கருத்துகள் இல்லை