Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் டிராக்டர் ஓட்டுநர் படுகாயம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே தடுப்பில் உள்ள செடிகளுக்கு டிராக்டர் மூலம்  சமுத்திரம் (40) என்ற டிரைவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகரை நோக்கி அதிவேகமாக வந்த லாரி  செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் சமுத்திரம் படுகாயமடைந்தார் மேலும் லாரி ஓட்டுனர் ராஜமுணியாண்டியும்(40) படுகாயம் அடைந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்டிராக்டரில் சிக்கிக்கொண்ட டிராக்டர் ஓட்டுநர் சமுத்திரம் மற்றும் லாரி ஓட்டுநர்  ராஜ முனியாசாமி ஆகியோரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் 144 தடை உத்தரவு நேரத்தில் சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டர் மீது அதி வேகமாக வந்த லாரி மோதியதில் விபத்து  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad