Header Ads

  • சற்று முன்

    திருவாடானை அருகே மணல் திருடிய 8 டிராக்டர் ஒரு ஜ சிபி பறிமுதல், திருவாடானை தாசில்தார் விசாரணை


    இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேளூர் அருகே வரத்துக் கால் பகுதியில் 7 டிராக்டரில் ஒரு ஜேசிபி மூலம் .சவடு மணலை உரிய அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை திருவாடானை தாசில்தார் மாதவன் துணை வட்டாட்சியர் சேதுராமன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடம் சென்று டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனங்களை பறிமுதல் செய்தார் 

    அதை ஒட்டிய அஞ்சுகோட்டை  கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (23), பழங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரபு ( 29 ), அமல்ராஜ் (32),  தேளூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி (27), குமார்(23) கொடிபபங்கு கிராமத்தை சேர்ந்த அஜித்(22), கணேசன் (27), மற்றும் ராஜாக்கள்வயல் கிராமத்தை சேர்ந்த  அழகர்சாமி (32) ஆகியோர்களிடம் வாக்கு மூலம் பெற்று மேல் நடவடிக்கைக்காக ராமநாதபுரம், சார் ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும் கட்டவளாகத்தை சேர்ந்த ஜேகராஜ்(42) என்பவர் சுருளி ஆற்று பகுதியில் மணல் திருடியவந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad