Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற சவலபேரியை சேர்ந்த திருப்பதி ராஜ் மற்றும் ராஜகோபால் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கயத்தார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர் புலித்துரை மகன் ராஜகோபால்(35). கேரளாவில் இரும்பு வியாபாரம் செய்து வந்த இவர் ஓட்டிச் சென்ற பைக் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விளாத்திகுளம் மார்க்கமாக செல்லும் அரசுப் பேருந்து - பைக் மோதியதில் ராஜகோபால் மற்றும் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இரும்பு வியாபாரி தருப்பதிராஜ்(40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து, கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் விளாத்திகுளம் மல்லி ஈஸ்வரபுரத்தைச் சேர்ந்த சு.சங்கரேஸ்வரனை(46) கைது செய்தனர்.


    கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad