Header Ads

  • சற்று முன்

    புலிவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை லீலை புரிந்த ஏட்டு ராமர் பகுதி மக்கள் கையில் சிக்கினார்

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான  இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனிடையே வேலைக்காக சென்னை செல்வதாக கடந்த 4 மாதங்களுக்கு ம்,முன்பு சென்னைக்கு வந்த நபர் அதன்பிறகு சொந்த ஊருக்கு  செல்லவில்லை. இதுகுறித்து அவரின் மனைவி புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகார் தொடர்பாக அந்த பெண் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுவந்த நிலையில் அங்கிருந்த ஏட்டு  ராமருக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நள்ளிரவு ராமர், அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் வீட்டுக்குள் உல்லாசமாக இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டின் வெளியே பூட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் செய்வதறியாது தவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து ஏட்டு ராமரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது சிலர் ஏட்டு  ராமரை செல்போனில் வீடியோ எடுக்க அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

    இதுதொடர்பாக காணாமல் போன அந்த இளைஞரின்  சகோதரி, புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதை ஏற்காததால் மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.  தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா புகாரை பதிவு செய்ய அறிவுறுத்தியதோடு ராமரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad