இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் கல்கி வரலாற்று படத்தில் திரிஷா உறுதி .... ஆனா அந்த நடிகர் இல்ல !
கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
த்ரிஷா நடிப்பது உண்மைதான். அவர் என்னவாக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஆனால், முக்கியமான கேரக்டர். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷா ஏற்கனவே நடித்திருந்தார். இப்போது அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை