Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்


    திருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த  கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இருந்த்தால் மக்கள் அதிர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் சொர்ணம் (80) என்பவரது ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே பல வருடங்களுக்கு முன்பு வீட்டின் தேவைக்காக கேணி வெட்டி பயண்படுத்தி வந்தார்கள். 

    இந்நிலையில் இங்கு பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை 11 மணியளவில் பெரிய சத்த்த்துடன் கேணி மண்ணில் புதைந்து பெயரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் 10 ஆழம் ஏற்பட்டு அருகில் இருந்த வீடும் புதையும் அபாயத்தில் இருந்த்து. இது குறித்து திருவாடானை தாசில்தார் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பேரில் –நிலைய அலுவலர் தலைமையில் வந்து பார்வையிட்டு பள்ளத்தை ஜே.சி.பி எந்திரத்தை வைத்து பள்ளத்தை மூடி பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுத்தனர். இது பற்றி தீ அணைப்ப்பு துறையினர் கூறுகையில் அருகில் ஊரணி இருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் இது போன்ற விபத்து நடக்க வாய்புள்ளதாக தெரிவிக்கப்ட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad