Header Ads

  • சற்று முன்

    ஊழல் சீன பிரதமருக்கு வரவேற்பு அளிப்பது இந்திய பிரதமர் மோடிக்கு அழகு அல்ல, இதுக்குறித்து வழக்கு தொடர இருப்பதாக ஓசூரில் டிராபிக் ராமசாமி பேட்டி


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிராபிக் ராமசாமி பங்கேற்ற இரு சக்கர வாகன தலைகவசத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மக்கள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முதலில் பாகலூர் பிரதான சாலையில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டு அதன்பிறகு இருசக்கர வாகனங்களில் தலைகவசம் இல்லாமல் வந்த 20 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய பின்னர் பேட்டியளித்த ராமசாமி:வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மாமல்லபுரம் சீனா பிரதமர் வருகைக்காக பேனர் அமைக்கப்பட்டுள்ளதே என்கிற கேள்விக்கு:அரசு இடத்தில் வைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதிக்கோர வேண்டிய அவசியமில்லை 

    விதிமுறைப்படி பேனர் அமைக்க வேண்டுமென்பதே நீதிமன்றத்தின் உத்தரவு, அதையும் மீறி சட்டத்திற்கு விரோதமாக. அரசு பேனர் வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆட்சியை கலைக்கும் சூழலைக்கூட ஏற்ப்படுத்த முடியும் என்றார். பிரபல இயக்குனர் உட்பட 49 பேரின் மீதான தேச துரோக வழக்கு பற்றிய கேள்விக்கு:பிரதமர் என்பவர் சட்டத்திற்க்கு உட்பட்டவரே, 130 கோடி மக்களை மிரட்டும் வகையில் முறைமுகாம மோடி தலையிட்டுள்ளார், நேரடியாக தலையிட அவருக்கு தைரியமில்லை என்றவர். சீன பிரதமர் 13 டன் தங்கத்தை ஊழங் செய்தவர், அவரை வரவேற்கும் மோடிக்கு இது அழகல்ல அரசிற்கும் அழகல்லை, இதை நிறுத்தாவிட்டால் வழக்கு தொடருவோம் என பேசினார்.


    எமது செய்தியாளர் : சி.முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad