Header Ads

  • சற்று முன்

    திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக நூல் வெளியிட்டு விழாவும், பயணச்சீட்டு கண்காட்சியும் நடைபெற்றது


    மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத் தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, சுவாமிநாதன், இளங்கோவன், யோகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

    திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
     நூலினை மூத்த சேகரிப்பு கலைஞர் அசோக் காந்தி வெளியிட சங்க தலைவர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை அஞ்சல்தலை சேகரிப்பாளர் காதர் ஹூசைன், யோகேஷ், இளங்கோவன், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, சாமிநாதன் நன்றி கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad