Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் முதியவரிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர் மூவரில் இருவர் கைது ஒருவரை தேடிவருகின்றனர்


    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15.09.19 அன்று திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய உறவினரின் திருமண நிகழ்ச்சிகாக வந்துள்ளார். அப்போது முதியவர் ஆறுமுகத்தை இருசக்கர வாகனத்தில் 3பேர் கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்து முதியவரை கடுமையாக தாக்கி அவரிடம் பணம், செல்போன், செயின், ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிபடை அமைத்து 3 கொள்ளையர்களை தீவிரமாக தேடினார்கள். இதில் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன் 26), ஆரணி அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

    மேலும் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள சூரியா (24) என்பவனை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மண்டை (எ) மணிகண்டன், மணி (எ) மணிகண்டன் ஆகிய 2பேர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad