Header Ads

  • சற்று முன்

    ருசியான தேங்காய் பூரி

    மைதா மாவு - 1 கப் 
    சர்க்கரை - 3/4 கப் 
    உருக்கிய நெய் - 1/4 கப் 
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப் 
    எண்ணெய் - பொரிப்பதற்கு 
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
    தண்ணீர் - 1 கப் 
    உப்பு - சுவைக்கேற்ப 
    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
    கிராம்பு - 8-10


    செய்முறை 
    ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள் அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள் அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள் ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும் நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும் இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும் பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி) இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும் அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும் துருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியேசெய்து பார்ப்பீர் ....... ருசித்து மகிழ்வீர் ...... சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad