திருவாடானை ஆர் .எஸ் மங்கலத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் மண்டகப்படி முன்னிட்டு பீமன் அரக்கர்கள் போல் வேடமிட்டு வீதி உலா வந்ததனர் .
ஆர்எஸ்மங்கலம் தாலுகா ஆர்எஸ் மங்கலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது இந்த கோவிலுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இன்று ஆர்எஸ்மங்கலம் கிராம மக்கள் மண்டகப்படி முன்னிட்டு பீமன் வேடமிட்டு அரக்கர்களை துரத்தும் நிகழ்ச்சியாக வீமன் வேடம் மற்றும் அரக்கர்கள் போல் வேடமிட்டு பக்தர்கள் வீதி வந்தார்கள் வருகிற சனிக்கிழமை பூக்குழி இறங்கும் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை