Header Ads

  • சற்று முன்

    ஜலக்காம்பறை நீர் வீழ்ச்சியில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அருள்மிகு முருகன் திருக்கோயில் ஜலக்காம்பறை நீர்வீழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று இரவு ஏலகிரிமலையில் கனமழை பெய்ததால் ஜலக்காம்பறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

    இதனால் அப்பகுதியில் உள்ள பெருமாபட்டு ஜெடையனூர் குரிலிசாப்பட்டு பள்ளவள்ளி உள்ளிட கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் கிணறுகள் நீர் நிரம்பி வருகிறது இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் சுற்றுலா தலமான ஜலக்காம்பறை நீர் வீழ்ச்சியில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு  சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad