Header Ads

  • சற்று முன்

    எம்.பி , செல்வராசு மீது தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !


    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

    இந்திய கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த நாகபட்டிணம் தொகுதி  மக்களவை உறுப்பினர் எம்.  செல்வராசு மீது  கொலை வெறி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர்களை   ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

    20-08-2019 அன்று அகஸ்தியாம் பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசி கொண்டிருந்த போது அவரை நோக்கி கத்தி விசபட்டுள்ளது விசப்பட்ட கத்தி அவர் மீது பாயாமல் வாகனத்தில் மோதி விழுந்துள்ளது எம்.செல்வராசு மீது கொலைவெறி தாக்குதல்  முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்று கண்டறிந்து காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.எனவே :  நாகபட்டிணம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களுக்கு அதிகபடியான  பாதுகாப்பு அளிக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad