Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை டிடிவி தினகரன் குற்றச்சாட்டு


    திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற அ.ம.மு.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக 2 அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் நீதிமன்றத்தில் யாரும் விளையாட்டாக பொய் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று கூறப்பட்டு உள்ளது. 6-ந் தேதி வரை பொருத்திருந்து பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று. புதிய கல்வி கொள்கையில் என்னென்ன அம்சங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று எங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளோம். அந்த மாற்றங்களை செய்தால் தான் வருங்கால மாணவர்களுக்கும், இன்று படிக்கின்ற மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கர்நாடகத்தில் நடைபெற்று உள்ளது ஜனநாயக படுகொலை என்று பொதுவாக இந்தியாவில் உள்ள மக்களின் கருத்து. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். சாலையில் பெண்கள் தனியாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. விவசாயிகள், விவசாய நிலங்கள், காடுகள், நீர் ஆதாரங்களை அழித்து தான் ஒரு சாலையை உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டு, ஏற்கனவே இருக்கிற சாலைகளை அகலப்படுத்த வேண்டும். காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருவதினால் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், அரசாங்கம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விபத்துகள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவர அரசு நினைக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் எந்தவித முனைப்பும் காட்டுவது இல்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு. 

    செய்தியாளர் - திருவண்ணாமலை - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad