கோவில்பட்டியில் இ எம் ஏ ஆர் இரத்ததான கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி இ எம் ஏ ஆர் ராமச்சந்திரன் அவர்களது நினைவு ரத்ததான கழகம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமினை இ எம் ஏ ஆர் ஜவுளிக்கடை நிறுவனர் வெங்கட்ரமணி முருகன் ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர்.
கண்விழி பரிசோதகர் டாக்டர் தங்கம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமினை இ எம் ஏ ஆர் ராமச்சந்திரன் ஜவுளி கடை ஊழியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர் இந்த முகாமில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட பயனாளர் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்ததோடு இலவச மருந்து மற்றும் கண் கண்ணாடிகள் பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் மாதவன் முத்துகிருஷ்ணன் சங்கர் ராமகிருஷ்ணன் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை