Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மழை வேண்டி ஸ்ரீ செண்பகவள்ளியம்மன் - ஸ்ரீ புவனநாத சுவாமி திருக்கோவில் முன்பு ஐயப்பசோவா சங்கம் சார்பில் 201 பால்குடம் எடுத்தனனர்


    கோவில்பட்டியில் மழை வேண்டி ஐயப்பசேவா சங்கம் சார்பில் ஸ்ரீ செண்பகவல்லியம்மன் - ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில்  முன்பு இருந்து 201பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மழை வேண்டியும், உலக மக்களின் ஒற்றுமை மற்றும் நன்மை வேண்டி 201 பால்குட ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் - ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில்; முன்பு மேளதாளம் முழங்க தொடங்கி பால்குட ஊர்வலம் கோவில்பட்டி முக்கிய வீதிகள் வழியாகவும் கோவிலின் நான்கு ரத வீதிகள் வழியாகவும் வீதி உல  சுற்றி வந்து மீண்டும் ஸ்ரீ செண்பகவல்லியம்மன் கோவிலில்  முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு ஸ்ரீ செண்பகவல்லியம்மன் மற்றும் ஸ்ரீ பூவனாநாதசுவாமிக்கு சிறப்பு   அபிஷேகம்
    மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீ ஹரிஹரன் ஐயப்ப பக்தர்கள் சேவா டிரஸ்ட் தலைவர் முருகன் செய்திருந்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad