Header Ads

  • சற்று முன்

    சென்னை அம்பத்தூர் மாதனகுப்பத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ப்பு....


    சென்னை அம்பத்துார் அடுத்த மாதனங்குப்பத்தில் மறைந்த சட்டமாமேதை பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு Y.S GROUP (ஓய். எஸ்) குருப்பின் நண்பர்கள் சார்பாக மாநில அளவிளான மாபெரும் ஆணழகன்  போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான இளைஞர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய ஆண்மகன் திறன் மற்றும் உடல் கட்டமைப்புகளை போட்டி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் செயல் விளக்கினார்கள். இதனையடுத்து திறம்பட  ஆண் திறன் உடலமைப்பினை  திறமையான முறையில் செய்து காண்பித்த ஆண் அழகன்கள் மதிப்பெண் முறையில் தேர்தெடுக்கபட்டு பரிசு மற்றும் பதக்க பட்டியல் வழங்கப்பட்டன. 

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஆக இந்திய குடிமகன் கட்சியின் நிறுவனர் மற்றும் அதன் தலைவர் பொது செயலாளர் வழக்கறிஞர்  திரு. ம.சிட்டிசன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுககு பரிசு மற்றும் பதக்க சான்றிதழ்களை வழங்கினர். இந் நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாட்டினை Y.S GROUP  (ஓய். எஸ்) குருப்பின் தொழில் அதிபர்கள் திரு. இனியன் மற்றும் திரு. இன்பா அவர்கள் திறம்பட செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சயினை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad