Header Ads

  • சற்று முன்

    சென்னை மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்மாற்றியில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து


    சென்னை மாதவரம்  தபால் பெட்டி பிரான்சிஸ் காலனி இரண்டாவது தெருவில் உள்ள மல்கோத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த வந்து கொண்டிருக்கின்றன இதனிடையே இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே உள்ள மின்மாற்றியில் திடீரென்று கரும்புகை வரத்துவங்கியது அந்த கரும் புகை ஆனது சற்று நேரத்தில்  தீ பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது .

    இதனை சற்றும் எதிர்பாராத அடுக்கு மாடியில் வசிக்கும் குடியிருப்பினர் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர் . இருப்பினும் மின்சார வாரியத்தில் மின்சாரம் நிறுத்தப்படாததால் தால் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீண்டும் மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் பின்னர் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது . அதன் பின்னர் மின்மாற்றியில் இருந்த கேபிள் வயர்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது உடனே தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் அதற்குள் மின்மாற்றியில் உள்ள அனைத்து கேபிள்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.
    இதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது இதனையடுத்து அந்த அடுக்குமாடிகள் கூடியிருந்த அனைத்து குடும்பத்தினரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர் பின்னர் மாதவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீ விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    nms.today youtube channel subscribe செய்யவும் bell பட்டனை அழுத்தவும்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad