காரைக்குடி நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலையில் உருளும் போராட்டம் நடத்தினர்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா நடைபெறும் நேரத்தில் முத்துபட்டிணம் முதல் வீதி குண்டும், குழியுமான சாலையால் திருவிழா சீர்குலையும் நிலையில் உள்ளது.பால்குடம்,அங்கபிரதட்சனம் போன்ற நேர்த்திகடன் நிகழ்ச்சிகளுக்கு மேற்படி சாலையால் பேராபத்து உள்ளது.இந்த சாலையை சீர் செய்யக் கோரி "தரையில் உருளும் போராட்டம்" நடந்தது. தோழர்கள் பிஎல்.இராமச்சந்திரன், முத்துசரவணன், மெய்யப்பன், வேலாயுதம், இரவிச்சந்திரன், ஜான் ஆகியோர்கள் வெய்யிலை பாராது ,மோசமான சாலையில் உருண்டு கண்டனம் தெரித்தனர்.
செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை