திருவாடானை தாலுகா திருவாடானை அருகே டி.இளையான்குடி கிராமதில் சமூக விரோதிகளால் தீ வைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே டி.இளையான்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடியிருக்கிறார்கள். இங்கு சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. இந்த வருடம் விவசாயம் செய்யப்பட்டு போதிய பருவமழை பெய்யாததால் பயிர் கர் வாடிவிட்டது. இந்நிலையில் யாரோ சிலர் தீ வைத்ததில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் தீ பற்றி மல மலவென எரிந்தது. இந்த தீ காற்றில் பரவி அருகில் வீடுகளில் தீ பரவும் அபாயம் இருந்தது. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் சிரமப்பட்டு பனையோலை மற்றும் வீடுகளில் இருந்த தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து ஊற்றி கட்டுக்குள் கொண்டுவ வர முயற்சித்தும் காற்று பலமாக அடித்துதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் சிரமமாக இருந்தது,
இந்நிலையில் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு கிராம மக்கள்தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு படையினர் கிராம மக்களுடன் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஏற்கனவே கடந்த வருடம் இதேபோல் தீ வைத்ததால் பல வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் நிலையத்தார் விசாரித்தார்கள்.
செய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார்
கருத்துகள் இல்லை