Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அருகேவிவசாயி வெட்டிப் படுகொலை கள்ளகாதல் விவகாரமா? போலீசார் விசாரணை



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ.கே மோட்டூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் சிவகுமார் 40 தனது இருசக்கர வாகனத்தில் ஏ.கே மோட்டூர் ஏரி அருகே சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் வெட்டி அதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்து ஊர் பொது மக்களிடம் கேட்டபோது இவர் பல வருடங்களாக விவசாய தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் பல பெண்களை வைத்து தனது நிலத்தில் கூலிக்கு வேலை செய்து வந்ததாக தெரிகிறது நிலையில் அதில் குட்டியம்மா என்ற பெண்மணி வயது 38 இவருக்கும் சிவக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக சந்தேகிக்கின்றனர். 



    இதனடிப்படையில் குட்டியம்மாவின் முன்னாள் கள்ளக்காதலன்  ஏகே மோட்டூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனிக்கும் சிவகுமாருக்கும் இடையே இதற்கு முன் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இந்நிலையில் இரவு 10 மணியளவில் சிவக்குமார் தனியாக இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மர்ம நபர்கள் சிவகுமாரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இக்காரணத்தால் உறவினர்கள் மட்டுமின்றி ஊர் பொதுமக்கள் அனைவரும் பழனிதான் இவரைப் படு கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.
    இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்துக்குரிய பழனியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
    செய்தியாளர் - நித்தியானந்தம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad