வடசென்னை தமிழ் இளைஞர் கழகம் 77ஆம் ஆண்டு விழா ஆனந்தா மழலையர் பள்ளியில் நடைபெற்றது.
சிங்காரத்தோட்டம்:வடசென்னை தமிழ் இளைஞர் கழகம் 77ஆம் ஆண்டு விழா ஆனந்தா மழலையர் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழா தலைமை திரு.மார்டின் கென்னடி மற்றும் அ.சி. மோதிலால் பாபு, இவ்விழாவில் சிறப்புரையாற்ற வந்த திரு. எஸ் வணங்காமுடி சிறப்பு சி.பி.ஜ.நீதிபதி(ஓய்வு) கழக ஆலோசகர்கள் பி.ஏ.கே.பி.இராஜ் சேகரன், தி.வே.சு.திருவள்ளுவர் ,பா.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இவ்விழாவில் முருகதனுஷ்கொடி பள்ளி மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.விழாவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ−மாணவிகளுக்கு தலா 500ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. முதல்வகுப்பு − மு.முஸ்கான் பாத்திமா,ஏழாம் வகுப்பு ம.கீர்த்தி,பத்தாம் வகுப்பு ஷாலினி. பரிசுகள் நன்கொடையாளர் அனுராதா கபிலர் வரவேற்பாளர் கே.இளைய பெருமாள் மா.மகேந்திரவர்மன், வே.குமார் மற்றும் மாணவர்களுக்கு புலவர் ராமதாஸ் திருக்குறள் புத்தகங்கள் வழங்கினார்.
இவ்விழாவில் மாணவ மாணவியர்கள் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ராஜ்குமார்
செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை