கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மாற்று திறனாளி தன்னால் இயன்ற பண உதவியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்
திருவண்ணாமலை கிரிவலபாதை சாலையில் அருள்மிகு அண்ணாமலையாரின் 23.11.2018 மகாதீபம் அன்று 2கை 1கால் இழந்த"நிலையில் மாற்றுதிறனாளி ஏழுமலை என்பவர் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாள் இயன்ற 2நாள் யாசகம் எடுத்த மக்களுக்கு நிவாரன நிதிக்காக 700ரூ உலகமக்கள் சேவை மையம் தலைவர் Dr.P. மணிமாறன் சமூகசேவகரிடம் ஒப்படைத்தாா்.மேலும் சமூகசேவகர் மணிமாறன் தி.மலை மாவட்ட ஆட்சியாளரிடம் தகவல் தெரிவித்து சந்திக்க அனுமதி கேட்டாா் உயர்திரு மாவட்ட ஆட்சியாளர் உடனே 8.12.18 சந்திக்க அனுமதி அளித்தார்.
அந்த மாற்றுத்திறனாளி நேரில் அழைத்து சென்று அவர் கையால் மாவட்ட ஆட்சியாளரிடம் 700ரூ நிவாரன தொகையை ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சேவை செய்த சமூக சேவகர் Dr.P. மணிமாறன் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழுமலை ஆகியோரை உயா்திரு மாவட்ட ஆட்சியாளர் பாராட்டினார் மேலும் இச்சேவை செய்ய ஊக்குவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய NMS TODAY youtube பார்க்கவும் உடனே subscribe செய்யவும்
செய்தியாளர் : .T. V . மூர்த்தி
கருத்துகள் இல்லை