திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகிகள் அலட்சம் ! பக்தர்கள் திண்டாட்டம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினத்தோரம் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன்றனர். விசேஷ நாட்களில் பன்மடங்கு கூடுதலாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் அடிப்படை வசதியான குடிநீர் விநியோகம் கூட கோவில் நிர்வாகம் முறையாக செய்ய தவறிவிட்டது.
பக்தர்கள் நலனை கருதி பாரத ஸ்டேட் வாங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஆரோ வாட்டர் சிஸ்டெம் உபயமமாக அளித்துள்ளது. அதனைக்கூட முறையாக கண்காணிக்காமல் பழுது ஏற்பட்டுள்ளது. .கோவிலுக்கு வரும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இன்றி மிகவும் அவதிபட்டு வருகின்றனர். பக்தர்கள் நலம் கருதி கோவில் நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேன்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை