திருவண்ணாமலையில் மூக்கு பொடி சித்தர் இன்று காலை முக்தி அடைந்தார்
திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் உள்ள மூக்குபொடி சித்தர் இன்று காலை 4-மணியளவில் முக்தி அடைந்தார்.இவருக்கு( வயது-91) இவரது உண்மையான பெயர் மொட்டையகவுண்டர் இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னகிழக்குப்பாளையம் கிராமமாகும்.நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்போவதாக தெரிகிறது. மேலும் இவரிடம் பல அரசியல் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து ஆசி பெற்று செல்வது வழக்கமாக வைத்தார்கள்.ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று பல நற்பலன்களை அடைந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை