Header Ads

  • சற்று முன்

    ஓசூர் பலபகுதிகளில் வழிபறி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது*


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் பகுதிகளில் சில நாட்களாக வழிப்பறி  செல்போன் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் வந்த நிலையில். புகாரின் அடிப்படையில் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாலர் திருமதி.மீனாட்சி ஆலோசனை படி நகர காவல் ஆய்வாளர் லட்சுமண்தாஸ் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு போலிசார் அதிரடியாக நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

    நகரபேருந்து நிலைய பயணிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதிகளில் வழிமறித்து செல்போன்களை திருடி வந்த     குற்றத்தடுப்பு பிரிவு போலிசார் அதிரடியாக நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். சேகர்,வினோத் (எ) ரஜினி,சரத்குமார்,சரவணன் ஆகிய நான்கு பேரை குற்றத்தடுப்பு பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.

    செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad