Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி அருகே இரட்டை கொலை - போலீஸ் குவிப்பு



    தூத்துக்குடி அருகே வல்லநாடு அருகே  நள்ளிரவில் இரட்டை கொலை போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.;

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பக்கவட்டி பகுதியைச் சேர்ந்தவர் நயினார் மகன் முத்துசாமி (64). இவர் அங்குள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் ராமையா மகன் சுடலைமணி (18), இவர்கள் இருவரும்  நேற்று  இரவில் வயலில் தண்ணீர் பாய்க்க சென்று கொண்டிருந்தனர்.


    அப்பொழுது தீடீரென மர்மநபர்கள் பாய்ந்து வந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தவர்களை வழிமறித்து அரிவாளால்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்கள். அவரது தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலையாளிகள்  தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் கேள்விப்பட்டு  அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று  இரவில் சேதுராமலிங்கபுரம் காட்டு பகுதியில் மூக்கம்மாள் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும், முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  கொலை செய்யப்பட்டவர்களின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை பற்றி துப்பு துலக்க  தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியை சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad