கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவிகள் மூவர் பலி
மயிலாடுதுறை ஞானாம்பிகை கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிவப்பிரியா, விவேகா, மற்றும் மஞ்சு ஆகிய மூன்று மாணவிகள் பூம்புகார் கடலில் குளிக்க சென்ற போது பெரு அலையில் சிக்கி இழுத்து சென்றது. நீச்சல் தெரியாததால் கடல் அலையில் இருந்து மீள முடியாமல் கடல் அலைக்கு பலியானார்கள். இவர்களை காப்பாற்ற முயன்ற சென்ற மாணவிகள் பேசும் நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
கடலில் இருந்து மீட்கப்பட்ட மூவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்த பூம்புகார் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : செந்தில்
கருத்துகள் இல்லை