ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவரும்,தேசிய இணைச்செயலாளருமான டாக்டர் பாலகிருஷ்னன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போரட்டம் நடைபெற்றது.
மற்ற மாநிலத்திற்கு இணையாக ஊதிய உயர்வு ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். ஆறாவது ஊதிய உயர்வு குழுவின் குறைகளை களைத்து உடனடியாக வழங்க கோரி போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கொடுங்கை - ஹரி பிரசாத்
கருத்துகள் இல்லை