Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் கஜா புயலுக்காக ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளுடன் நிதி திரட்டிய நடன கலைஞர்கள்



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஜாபுயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ் பண்பாட்டு மேடை நடனக்கலைஞர்கள் முன்னேற்றசங்கத்தினை சேர்;ந்த நடனகலைஞர்கள் பிரபலர் நடிகர்கள் வேடமணிந்து ஆடல்,பாடல்களுடன் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினர்.


    தமிழகத்தில் கஜாபுயலினால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்கள் மறுவாழ்வு பெறுவதற்கு பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஜாபுயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ் பண்பாட்டு மேடை நடனக்கலைஞர்கள் முன்னேற்றசங்கத்தினை சேர்;ந்த நடனகலைஞர்கள் ஆடல்,பாடல்களுடன் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினர். 



    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தொடங்கிய கலைநிகழ்ச்சியில் நடனகலைஞர்கள் பிரபல நடிகர்களின் வேடமணிந்து, அவர்களின் பாடலுக்கு நடனமாடினர். அண்ணாபஸ் நிலையம், ரெயில்வே நிலையம், மார்க்கெட் என முக்கிய பகுதிகளில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினர். இதன் மூலமாக கிடைக்கு நிதி மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad