காவு கேட்கும் உயர் மின்னழுத்த ஒயர் - அலட்சியம் காட்டும் மின்வாரிய ஊழியர்கள்
வார்டு 49 - மண்டலம் 5க்கு உட்பட ராயபுரம் கிரேஸ் கார்டன் 2வது தெருவில் உயர் மின்னழுத்தம் ஒயர் உயிரை பலி வாங்க காத்திருக்கிறது.
மின்சாரவாரியம் அலட்சிய போக்கால் உயர் மின்னழுத்தம் ட்ரான்ஸ் பரத்தில் இருந்து வெளி வரும் உயர் மின்அழுத்தம் சாலையின் குறுக்கே கிடக்கிறது. இந்த சாலையின் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் நடந்து செல்கின்றனர். பொது மக்கள் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்ததொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயிர் பாளை வாங்கினால்தான் நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டால் அது எங்கள் வேலையில்லை சாலை தோண்டியவர்களிடம் போய் சொல்லுங்குகள் என்று பொறுப்பற்ற பதிலை கூறுவதாகபகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை