15 வயது சிறுமியை பாலியில் செய்து கர்பிணியாகிய 63வயது முதியவருக்கு போஸ்க்கோ சட்டம் பாய்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவரை மகளிர் போலிசார் போஸ்க்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஓசூர் அருகே முதியவர் கோவிந்தராஜ் மாடு மேய்த்து வந்துள்ளார், பள்ளிக்கு போகாத சிறுமியும் மாடு மேய்ப்பதே வேலையாக செய்து வந்ததாக சொல்லப்படுகிறது, முதியவர் உடன் மாடு மேய்க்க சிறுமியின் தந்தை அனுப்பி வந்துள்ளார், சிறுமி என பாராத 63 வயது கோவிந்தராஜ் , சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை படுத்தி வந்துள்ளார், தாய் இல்லாத,சிறுமி வீட்டில் தெரிவிக்க பயந்துள்ளது, தற்போது சிறுமி கர்ப்பமடைந்ததை தனது அத்தையிடம் கூறியுள்ளார், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அத்தை, சிறுமியின் தந்தையிடன் தெரிவித்ததாகவும்,
இன்று ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் முதியவரை அழைத்து விசாரித்ததில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்ததுள்ளது, அதனை தொடர்ந்து முதியவர் கோவிந்தராஜை போஸ்க்கோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 15 வயது சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .பேத்தி வயதுடைய சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை