Header Ads

  • சற்று முன்

    கொடுங்கையூரில் அத்துமீறி மணல் கொள்ளை



    கொடுங்கையூர் வேதாந்த முருகப்பா நாயக்கர் சாலையில் வேதாந்த முருகப்பா நாயக்கருக்கு  சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பு  கொண்ட இடத்தில் வாரிசு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பெண் வாரிசின் உரிமையாளர்களான உமாபதி, தனசேகர், சுகுணா, திருவேங்கடம் ஆகியோருக்கு தெரிவிக்காமல்  ஆண் வாரிசு உரிமையாளர்களான வேதா,ராஜன், சுந்தர் இவர்கள் வழக்கில் உள்ள இடத்தில் அத்துமீறி கட்டடம் கட்டுவதோடு  15 ஏக்கர் நிலப்பரப்பில் மணல் திருட்டுத்தனமாக  எடுத்து மணல்  விற்பனை செய்து வந்தனர். 


    இந்த சமூக விரோத செயலை கண்டித்து பெண் வாரிசின் உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் புகார் அளித்து மணற் கொள்ளையை தடுக்க  வட்டாச்சியர் துணையுடன் கடந்த 25ஆம் தேதி  சீல் வைத்தனர்.

    வட்டாச்சியர் வைத்த   சீலை அத்துமீறி உடைத்து வட்டாச்சியர் சிறை பிடித்த வாகனத்தை அப்புறபடுத்த முயற்சித்ததுடன் மீண்டும் மணற் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆகவே இவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை சட்டப்படி கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.


    செய்தியாளர் : பொன் முகரியன் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad